ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,59,055 பேர் கைது கைது , ரூ.5,11,27,279 அபராதம் வசூல்

Default Image

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 4,59,055 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர் என்று  தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது  செய்து வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த  4 லட்சத்து 59 ஆயிரத்து 055 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை இதுவரை 4 லட்சத்து 32 ஆயிரத்து 761  வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளது. மேலும் வெளியே சுற்றிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 312  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரத்து 279  ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்