ஒரு மாதத்திற்கு பின் சீனாவை மீண்டும் தாக்கும் கொரோனா!

Default Image

ஒரு மாதத்திற்கு பின் சீனாவை மீண்டும் தாக்கும் கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸானது முதலில் தனது தீவிர தாக்குதலை  நடத்தியது சீனாவில் தான். அங்கு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். சீனாவில் டிசம்பர் மாத இறுதியில் முதன்முறையாக ஊஹான் மாகாணத்தில்  இந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தொடர்ந்து இந்த வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். ஊஹானில் மார்ச் முதல் வாரத்தில் பாதிப்பு குறைந்த நிலையில், 76 நாள் ஊரடங்குக்கு பின் கடந்த மாதம் 8ம் தேதி ஊஹானில் முழு ஊரடங்கு விலக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பியது. 

 இந்நிலையில், தற்போது ஒரு மாதத்திற்கு பின் ஊஹானில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதாரத்துறை இதனை உறுதி செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் மனைவி, உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்