அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா! அச்சத்தில் ஆழ்ந்த அமெரிக்க மக்கள்!

Default Image

நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாங்கி வருகிறது. நாளுக்கு நாள் புதிய அறிகுறிகளுடன் தோன்றும் இந்த வைரஸானது, தொடர்ந்து தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். 

ஆனால், இந்த வைராசை முற்றிலுமாக அழிப்பதற்கு இதுவரை எந்த  மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலக அளவில்,  4,255,942 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 287,332 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில், 1,385,834 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81,795 பேர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். 

இந்த வைரஸ் நோயால், அமெரிக்காவில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிகிற நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்