மஹாராஷ்டிராவில் ஓரே நாளில் 1278 பேருக்கு கொரோனா!

Default Image

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 1278 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,171 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 67,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாய் 1278 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 53 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை ஊறுதிசெய்துள்ளது.

இதனையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,171 ஆக உயர்ந்துள்ளது. அதில் 4,199 பேர் வீடு திரும்பிய நிலையில், 832 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்