முதுகுவலியால் அவதிப்பட்டவருக்கு 3 சிறுநீரம் இருப்பது கண்டறிப்பட்டது !

Default Image

முதுகுவலியால் அவதிப்பட்டவருக்கு 3 சிறுநீரம் இருப்பது கண்டறிப்பட்டது. 

பிரேசிலில் 38 வயதுடைய ஒருவருக்கு கடுமையான முதுகுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதுகு பகுதியை சி.டி ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். சி.டி ஸ்கேனில் அவருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் அறிவித்துள்ளது.

அவருடைய இடது பக்கத்தில் ஒன்று, இடுப்பு பகுதிக்கு அருகில் இரண்டு சிறுநீரகங்கள் இணைந்து உள்ளது. இதனால் அவருக்கு சிறுநீரக கோளாறு இருக்கிறதா என்று பரிசோதனை செய்ததில் ஏதும் இல்லை என்று அறியப்பட்டது. அவருக்கு வெறும் முதுவலி மருந்துகளை மட்டும் கொடுத்துள்ளனர்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்