கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி இது தான் – உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர்

Default Image

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி இது தான் என உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் தெரிவித்துள்ளார். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இதனை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளது. 

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இதுவரை உலக அளவில், 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் அவர்கள் கூறுகையில், உலக நாடுகள் அனைத்தும், பொது சுகாதாரக் கட்டமைப்பின் அடிப்படையான விதிகளை நடைமுறைப்படுத்துவதில், கவனம் செலுத்துவதுதான் நீண்ட கால சவாலான கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், கற்பனை செய்யமுடியாத இழப்புகளைத் தவிர்க்க, மறுபடியும் உலக நாட்டின் அரசுகள், பாதிக்கப்பட்டவர்களை கண்டடைதல், தடம் வழி கண்டறிதல், சோதனைக்கு உட்படுத்துதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ரியான் அவர்கள் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar