உலகை விடாமல் துரத்தும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது.!

Default Image

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்புகளும் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவால் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், உலகளவில் இந்த கொரோனா என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 40,14,311 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 2,76,237 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டதில் 13,85,581 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 48,699 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது வரை கொரோனா வார்டில் 23,52,493 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 13 லட்சத்து 22 ஆயிரத்து 154 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் ஆயிரத்து 687 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,299 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,117 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,68,408 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,201 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17,185 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 1,168 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில்உள்ளனர். இதையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,241 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 211,364 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக உலகிலேயே இந்த நாடுகள் தான் கொரோனாவால் அதிக இழப்புகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்