சென்னையில் இந்த மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்

Default Image

சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவி வரும் சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தினந்தோறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது .கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது .

 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5409 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மாடும்  580 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .சென்னையை பொறுத்தவரை 316 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சென்னையில் 2644 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   

இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மண்டலமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கொரோனா  பாதிப்பில் சென்னை மண்டலத்தை பொருத்தவரை முதலிடத்தில் உள்ளது. திரு.வி.க.நகரில் 448  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரத்தில் 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்