மதுபாட்டில்கள் வாங்க 3 மணி நேரம் அசராமல் காத்திருந்த 60 வயது மூதாட்டி!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய ராசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு மே-17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் தமிழக அரசு மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். 

இந்நிலையில், ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில், காலை முதலே சுமார் 3 மணி நேரம் காத்திருந்து, அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் 4 மதுபாட்டில்களை வாங்கிச்சென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்