தொழிலாளர் பற்றாக்குறை.! 12 மணி நேரம் வேலை.!

Default Image

மஹாராஷ்டிராவில் தொழிலாளர் பற்றாக்குறையை உள்ள தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதி.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்து மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறையாததால் மூன்றாவது முறையாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மத்திய அரசு சில தளர்வுகள் கொடுத்து நிபந்தனையுடன் அலுவலகங்கள்,தொழிற்சாலைகள்  இயக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பல தொழிற்சாலைகள் 50 % தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் தொழிற்சாலைகளில் ஜூன் 30 வரை 12 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதித்துள்ளது.

இதனால் கூடுதல் நான்கு மணிநேரங்களுக்கு தொழிலாளர்களுக்கு வழக்கமான ஊதியத்தை இரட்டிப்பாக கொடுக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்