மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது – தமிழக அரசு

Default Image

டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைன் மூலம் வீடுகளில் டெலிவரி செய்ய முடியாது என்று தமிழக அரசு பதில்.

டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைன் மூலம் வீடுகளில் டோர் டெலிவரி செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதனால் மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுக்கடைகளில் மொத்த விற்பனை செய்யப்படாது என்றும் தனி நபர்களுக்கு தான் மதுபானம் விற்பனை செய்யப்படும் என கூறியுள்ளது. மேலும் டாஸ்மாக் கடையை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்