இராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

Default Image

இராமேஸ்வரத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து,  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. எனவே மறுஅறிவிப்பு வரும் வரை இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் துறைமுகங்களில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக 5 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ள நிலையில் அரசு புயல்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்