கிரிவலத்திற்கு செல்ல தடை.! திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் சித்திரை மாத பௌர்ணமியான சித்ராபௌர்ணமியில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை செல்வர்.
ஆனால், இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிவலத்திற்கு பக்தர்கள் வர உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். நாளை மறுநாள் வரவுள்ள சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 6ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையில் இந்த தடை இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.