ஊரடங்கு முடிந்து திறக்கப்பட்ட நகைக்கடையில் 19 முட்டையுடன் இருந்த மலைப்பாம்பு !

கேரளாவில் ஊரடங்கு முடிந்து திறக்கப்பட்ட நகைக்கடையில் 19 முட்டையுடன் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். 

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவின்படி அனைத்து வகையான கடைகளும் பூட்டப்பட்டன. இந்நிலையில், கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள பையனூரில் ஊரடங்கில் பூட்டியிருந்த நகைக்கடையை தூய்மை பணிக்காக திறந்த போது 19 முட்டைகளுடன் மலைப்பாம்பு ஒன்று இருப்பது கண்டறிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தடைந்த வனத்துறையினர் பக்குவமாக பாம்பை பிடித்தனர். இந்த மலைப்பாம்பு 3 மீட்டர் நீலமும் 25 கிலோ எடையும் கொண்டுள்ளது.