கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்.!

Default Image

இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும், தலைநகர் சென்னை அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்திடம் தமிழக முதல்வர் தாக்கல் செய்ய உள்ளார். இது போல கடந்த மாதமும் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர், ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இன்று மாலை 5 மணிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரிடம் சந்தித்து தாக்கல் செய்ய உள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்