BREAKING: விழுப்புரத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று.!

Default Image

இன்று காலை விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாக பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்ற பலருக்கும்  தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 20 பேரும் கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறி வாங்கி வந்து  விழுப்புரத்தில் விற்பனை செய்தவர்கள். இந்நிலையில், மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால், விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. நேற்று விழுப்புரத்தில் 33 பேருக்கு பாதிப்பு புதியதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்