இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியது

Default Image

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து  வந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது .தினமும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது .

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.தற்போதை நிலவரப்படி 42533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1373 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 11,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 548 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,2115 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்