இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக சீத்தாராம் யெச்சுரி தேர்வு…!
புது டெல்லி:இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாரம் யெச்சுரி தேர்வு செய்யப்பட்டார்.இவர் கடந்த 1996-2017 தொடர்ச்சியாக சிறந்த நாடாளுமன்றவாதியாக தேர்வுசெய்யப்பட்டு உள்ளார்.நாடாளுமன்ற கூட்டங்களில் அதிகமாக மக்களின் பிரச்சனைகளை தர்க்க முறையில் எடுத்துரைப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை.இந்தியாவில் உள்ள அறிவார்ந்த அரசியல்வாதிகளில் இவர்தான் முதன்மையானவர்,மாணவ பருவத்தில் காங்கிரஸ் அரசின் அவசர நிலை காலத்தின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை துணிந்து எதிர்த்து அவரின் தவறை சுட்டிகட்டியவர்.இவர் பிறந்தது சென்னையில் என்பது குறுப்பிடத்தக்கது…