இன்று முதல் தமிழகத்தில் இவைகளுக்கு தடைகள் தொடரும்.!

Default Image

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்கள் இயங்க ஏற்கனவே இருந்த தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக மேலும் இரண்டு வாரத்திற்கு (மே 17 வரை) ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் சில கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான வழிக்காட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழக்தில் கீழ்காணும் செயல்பாடுகளுக்கு தடைகள் தொடரும் :

  • பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்க தடை.
  • வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
  • திரையரங்குகள், கேளிக்கை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்கா, அருங்காட்சியகங்கள், நீச்சல் குளம், விளையாட்டு அரங்கு போன்ற இடங்களுக்கு தடை.
  • விமான, ரயில் மற்றும் மெட்ரோ சேவை போன்ற பொதுப் போக்குவரத்து தடை.
  • டாக்ஸி, ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷா இயங்க தடை.
  • மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை இயங்க தடை தொடரும்.
  • இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது.
  • திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்