அரசு ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் – தமிழக அரசு.!

Default Image

50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக  பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை அல்லாத பணிகளில் மாவட்ட நிர்வாகம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்திக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டோர் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் பள்ளிக் கல்வித்துறை 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக  பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Droupati Amman koil
Union minister Amit shah - ADMK Chief secretary Edappadi palanisamy
Delhi Capitals Super over 2025 2013
DC vs RR
Student Chinnadurai
TATA IPL 2025- DC vs RR