அரசு ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் – தமிழக அரசு.!

50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை அல்லாத பணிகளில் மாவட்ட நிர்வாகம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்திக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டோர் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் பள்ளிக் கல்வித்துறை 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025