தேனி குரங்கணி தீ விபத்து எதிரொலி!சென்னை ட்ரெக்கிங் அலுவலகத்தில் சோதனை …

Default Image

சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் , தேனி குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, பாலவாக்கத்தில் உள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் அலுவலகத்தில், ஆய்வு மேற்கொண்டார்.

தேனி குரங்கணி மலைக்கு, ஈரோடு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள், இரு பிரிவாக பயணித்துள்ளனர். இவர்களில் சென்னையிலிருந்து 27 பேரை, பாலவாக்கத்தில் உள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனம் அழைத்துச் சென்றது.

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் மற்றும் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தப்பியோடி விட்டனர். மேலும், நிறுவனத்தின் பெயர் பலகையும் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஏழுமலை, நிறுவனம் அமைந்துள்ள கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஊழியர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த வட்டாட்சியர், பின்னர் அங்கிருந்து சென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்