கொரோனா பாதிப்பால் ஊரடங்கை தளர்த்தும் நாடுகளுக்கு மிகுந்த கவனம் தேவை… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

Default Image

உலகம் முழுவடும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக தற்போது உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு உலகமே ஆளாகியுள்ளது. இந்த கொரோனா வைரஸ்தொற்றின் வீரியம்  இன்னும் நீடிப்பதால் செய்வது அறியாமல் தினறி வருகின்றனர். உலகையே நிலைகுலைய செய்துள்ள இந்த கொரோனா வைரஸ் தற்போது வரை 212 நாடுகளில் 34 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இதன் கோர பிடியில் சிக்கி  சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். கொரோனா பரவலால் கடந்த 3 மாதங்களாக உலகமே முடங்கி போயுள்ள நிலையில், ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இறங்கியுள்ளனர். ஆனால் இது போன்ற தருணங்களில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்