#BREAKING: மாவட்ட, மாநில எல்லைகளை கடந்து வந்தால் 14 நாள் தனிமைப்படுத்த உத்தரவு.!

Default Image

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பி உள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வோரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பி உள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டவரை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். தனிமைப்படுத்தபடுவதற்கான ஸ்டிக்கரை சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் ஒட்ட வேண்டும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து  அரசு வழங்கிய கூடிய சிறப்பு பயண பாஸை  முறைகேடாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்