தூத்துக்குடியில் சீன பெருஞ்சுவரை மிஞ்சும் தடுப்பு சுவர்
தூத்துக்குடியில் மாபெரும் திட்டமாக சீன பெருஞ்சுவரை மிஞ்சும் தடுப்பு தடுப்புவேலி ஒன்று அமைகப்பட்டுள்ளது .
தூத்துக்குடிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் உள்ளது சத்யாநகர் பாலம், இது கிழே செல்லும் ரயில் போக்குவரத்துக்காக அமைகப்பட்டுள்ளது,இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளது இதை சுற்றி 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . சமிபத்தில் தூத்துக்குடியில் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது .இந்த சாலையின் இருபுறமும் சுமார் 20 அடி பள்ளம் இருக்கிறது ,இரவு நேரங்களில் மின் விளக்குகளும் கிடையாது தனியார் பேருந்துகளும் மின்னல் வேகத்தில் செல்கிறது ,இந்த இடையுறுகளில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு சமிபத்தில் நடந்த தெர்மாகோல் திட்டம் போல் சாலையின் இருபுறங்களிலும் சவுக்கை கம்புகளில் கயிறு கட்டி பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர் .இந்த பணி பற்றி பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ஆனாலும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது .
தூத்துக்குடி தினச்சுவடு whatspp குருப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
Thoothukudi Dinasuvadu group