54 வயது பிரதமருக்கு கொரோனா! அதிர்ச்சியில் உறைந்த நட்டு மக்கள்!

Default Image

கொரோனா வைரஸ் யாரையும் விட்டு வைக்காத நிலையில், தற்பொழுது ரஷ்யாவின் புதிய பிரதமருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் சில நாடுகளை  தவிர்த்து மற்ற நாடுகளில் எல்லாம் தனது கோர முகத்தை காண்பித்துக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் ரஷ்யாவிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கியதை தொடர்ந்து, 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1073 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது ஜனவரி 16 ஆம் தேதி ரஷ்யாவின் பிரதமராக பதவியேற்ற 54 வயது நிரம்பிய மிக்கைல்  அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவரே தன்னை தான் தனிமை படுத்தி உள்ளார். நட்டு பிரதமருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்,  அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் விரைவில் உடல் நலமாகி பணிக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, அவரது பணிகளை துணை பிரதமர் பார்த்து கொள்வார் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
GoodBadUgly
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl
velmurugan mla