#Breaking : சென்னையில் ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா.!

Default Image

சென்னையில் இன்று மட்டுமே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 906-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே இதுவரை இல்லாத அளவுக்கு 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,323-ஆக உயர்ந்துள்ளது.

அதில் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று மட்டுமே 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 906-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 1,258 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவிற்காக சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 1035-ஆக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்