முக்கிய அறிவிப்பு : கொரோனாவின் 6 புதிய அறிகுறிகள் !

Default Image

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலகில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபரை அடையாளம் காண காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற 3 அறிகுறிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 புதிய அறிகுறிகளை அறிவித்துள்ளனர்.

தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு, குளிர் காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல் மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைதல்  மற்றும் கண் சிவப்பாக மாறுதல் போன்ற 6 புதிய ஆறிகுறிகளை மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் பட்டியலிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் நோய்த்தொற்று ஏற்பட்டு 2 முதல் 14 நாள்களுக்குள் தென்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்