பாகிஸ்தான் பெண்ணை துபாய் சென்று சந்தித்தாரா ஷமி?பிசிசிஐ-யை உதவியை நாடிய கொல்கத்தா போலீஸ்….

Default Image

மேலும் ஒரு சிக்கலில் முகமது ஷமிக்கு. பல்வேறு பெண்களுடன் தொடர்புள்ளது, அவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப் படுத்துகின்றனர் உள்ளிட்ட பல்வேறு புகார்களை மனைவி ஜஹான் அளிக்க போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள முகமது ஷமி  தற்போது மீண்டும்  மாட்டியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா முடிந்தவுடன் மொகமது ஷமி எங்கு சென்றார் என்பதைக் கண்டறிய விசாரணை செய்து வரும் கொல்கத்தா போலீஸ் குழு தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியுள்ளது.

ஷமி மனைவி அளித்த புகாரின்படி தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு துபாய் சென்ற ஷமி அங்கு பாகிஸ்தான் பெண் ஒருவரை சந்தித்தார் என்று கூறியுள்ளார், மேலும் ஷமி துபாயில் தங்கியிருந்தார் என்கிறார் மனைவி ஜஹான்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஷமி எந்த வழியாக இந்தியா திரும்பினார், அவரது பயண விவரம் என்ன என்பதை கொல்கத்தா போலீஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் எழுதிக் கேட்டுள்ளது.

மொகமது ஷமி அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு, தன் சொந்த வாழ்க்கை மட்டுமல்லாது கிரிக்கெட் வாழ்க்கையிலும் யாரொ விளையாடி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு  தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்