உழைப்பாளர் வர்க்கத்திற்கு மே-1 சிறப்பான நாள் தான்!

Default Image

உழைப்பாளர் வர்க்கத்தினருக்கு மே-1 ஒரு சிறப்பான நாள்.

இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. 1923இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான மா.சிங்காரவேலர் தலைமையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையான தொழிலை சார்ந்து தான் இருக்கிறான். எந்த மனிதனுக்கும் அவனுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமானால், அவன் கண்டிப்பாக உழைக்க வேண்டும்.

இன்று ஆணாய் பிறந்த ஒவ்வொரு குடிமகனும், தனது குடும்பத்திற்காக கண்டிப்பாக உழைத்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளான். அந்த வகையில் தினமும் வியர்வை சிந்தி உழைத்து தான், ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு ஆண்களும் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரையில், பல விஷேசமான நாட்கள் கொண்டாடப்படுகின்ற நிலையில், தொழிலாளர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், மே- 1ம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்