சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-கனிமொழி

Default Image

 மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும்  சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்  சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தொடர்ந்து  பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பி  கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கொரோனா சிக்கலைக் கையாள்வதில், அரசின் தவறுகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுவதில் குறை காணும் முதல்வர் பழனிசாமி , சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும்  சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களில் விரிவான செய்திகள் வந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காதது மிகவும் ஆபத்தானது. இது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

SRHvsMI
Ajith Kumar Racing
ponmudi - highcourt
Vijay -Waqf Amendment Bill
Munaf Patel FINE
Dhankar