கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரும் குணமடைந்தார் – கொரோனா இல்லாத நாடாக மாறிய ஏமன்

 கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது  ஏமன்.

கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் உருவான நிலையில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக ஆசியாவில் உள்ள ஏமனில்
அந்த நாட்டின் சுகாதார அமைப்பு அழிந்துவிட்டது.

இதனால் அந்த நாட்டில் பெருந்தொற்று நோய்கள் ஏற்பட்டால் சமாளிக்கும் திறன் இல்லை.இதன் விளைவாக ஏமனில் கொரோனாவை பரவவிடாமல் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையும் தாண்டி அங்கு கொரோனா பரவி விட்டது.

அங்கு 60 வயது உடையவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.இதன் பின்னர் அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாதித்த அந்த நபருக்கும் குணமடைந்து விட்டதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.