முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.8.25 லட்சம் அபராதம் ஜெர்மனி அதிரடி.!

Default Image

ஜெர்மனியில் முக கவசம் அணியாமல்  சென்றால் ரூ.8.25 லட்சம் வரை  அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த பல  நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை அதிகம் தாக்கி வருகிறது.

இந்நிலையில், ஜெர்மனியில் 159,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,314 ஆக உள்ளது. இதையெடுத்து, ஜெர்மனி ஊரடங்கை அறிவித்துவிட்டு, கடந்த வாரம் சில நிபந்தனைகளை தளர்த்தியது, பொது இடங்களில் மக்கள் முக கவசம்  சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என  அறிவுறுத்தியது.

ஆனால், அதை அதிகமான மக்கள் கடைபிடிக்காமல் பொது இடங்களில் சென்று வந்தன.இதனால், ஜெர்மனி அரசுஅவசர  அவசரமாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், பேருந்து மற்றும் ரயில்களில் நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

முக கவசம் அணியாமல் செல்வது சட்டப்படி குற்றமாகும்.  இடங்களுக்கு ஏற்றாற்போல இந்திய மதிப்பில் ரூ.8.25 லட்சம வரை  அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்