2 காவலர்களுக்கு கொரோனா.! நுங்கம்பாக்கம் காவல் நிலையம் மூடல்.!

Default Image

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலர் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டுள்ள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவர் வசித்த பகுதி, வேலைக்கு செய்யும் பகுதி என அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே விடாமலும், அங்கிருப்பவர்களை வெளியில் அனுப்பாமலும் அவர் பழகிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுவது வழக்கம்.

அந்தளவிற்கு கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதி காவல் நிலையத்தில் பணிபுரியும் 2 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் ரைட்டர் எனவும், மற்றொருவர் உளவுத்துறை காவலர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ள்ளது. அந்த காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் வேலைகள் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்