மோடிக்கு முதல்வர் வாழ்த்து!!
ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.