அம்மா உணவகங்களுக்கு ரூ.1 லட்சம் நிதி கொடுத்த அமைச்சர்.!

Default Image

அம்மா உணவகங்களில் இலவச உணவுக்காக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கடந்த 23-ம் தேதி அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. கரூர், உழவர் சந்தை மற்றும் அரசு மருத்துவகல்லூரி பழைய மருத்துவமனை ஆகிய இரண்டு  இடங்களில் உள்ள அம்மா உணவகங்களிலும்,  குளித்தலையில் உள்ள ஒரு  அம்மா உணவகத்தில் தினமும் சுமார் 2,500 மேற்பட்டோர் இலவசமாக உணவருந்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் உழவர் சந்தை அம்மா உணவகத்தை ஆய்வு செய்யும் போது, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்கு முதற்கட்டமாக ரூ.1 லட்சத்தை நகராட்சி ஆணையர் சுதாவிடம் வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்