மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் கோயம்பேடு சந்தையை மூட வேண்டி வரும்.!

Default Image

மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் கோயம்பேடு சந்தையை மூட வேண்டி வரும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தார். ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை, மொத்த வியாபாரம் என்று சில்லறை வியாபாரம் செய்வதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குற்றச்சாட்டினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது குறித்து நாளை காலை 10 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை  கேளம்பாக்கத்தில் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வியாபாரிகள் ஆம்னி பேருந்து நிலையத்தில், தற்காலிகமாக செயல்பட அனுமதிக்குமாறு  கோரிக்கை வைத்துள்ளனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வியாபாரிகளுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்