கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்கும் அதிநவீன ரோபோ !

Default Image

கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்கும் அதிநவீன ரோபோவை களம் இறக்கிய பெங்களூர் மருத்துவமனை.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,496 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 824 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா  தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரில் விக்டோரியா மருத்துவமனையில் கொரானோ நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து, மாத்திரைகள் கொடுக்க ரோபோக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் செவிலியர் மற்றும் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்கலாம் என்பது குறிப்பிட்டதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்