4 நாட்களும் பிரியாணி பண்ண போரிங்களா ? – மக்களை கலாய்த்த வெங்கட் பிரபு !

Default Image

4 நாட்களும் பிரியாணி பண்ண போரிங்களா ? என்று  மக்களை கலாய்த்த திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு !

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் என ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த 4 நாட்கள் மூடப்படும் என்பதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் முகக்கவசம் அணியாமலும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
மக்களின் முட்டாள் தானமான செயலால் திரைப்பட நடிகர்கள் மற்றும் பலர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ் திரைப்பட இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ” எதற்கு சென்னையில் இவ்வளவு பயம், காய்கறிகளோடு வைரஸையும் வாங்கி வரிங்களா, 4 நாட்களும் பிரியாணி பண்ண போரிங்களா ? எதுவும் கடந்து போகும், பயப்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்