“தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ”குரங்கணி விபத்து வைரமுத்து இரங்கல்…..
இதுவரை 9 பேர் தேனி மாவட்டத்தில் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் மற்றும் 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள்.
இச்சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் படலாசிரியர் வைரமுத்து உயிர் வலிக்கிறது என்ற பெயரில் இரங்கல் கவிதை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள்மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.
“சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.
இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்.
இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.