BREAKING: மருத்துவர், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு.! முதலமைச்சர் அறிவிப்பு .!

Default Image

ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி  என அறிவிப்பு.

தமிழகத்தில்  நேற்று வரை கொரோனாவால்  1,755 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு  2 மாதம் பணி நீட்டிப்பு என  முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது புதியதாக  1,323 செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Image

தேர்வு செய்யப்பட்டுள்ள செவிலியர்களுக்கு பணி ஆணை கிடைத்தவுடன் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்