இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பாராட்டி பரிசு தொகை வழங்கப்படும்: பிசிசிஐ அறிவிப்பு
மும்பை: ஐசிசி மகளிர் உலககோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பரிசு தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ செயல் தலைவர் சி.கே.கண்ணா தெரிவித்துள்ளார். நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய வீராங்கனைகள் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிதற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.