இந்தியாவை குறிவைக்கும் கொரோனா.! பாதிப்பு 23,452 ஆகவும், உயிரிழப்பு 723 ஆகவும் உயர்வு.!

Default Image

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 23,452 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 723 ஆகவும் உயர்ந்துள்ளது.

சீனாவில் உஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெருந்தொற்றாக மாறியுள்ளது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,57,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது இந்தியாவை குறிவைக்கிறது கொரோனா. இதனால் நிறுவைடைய இருந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர வைரசால் ஒரு நாளைக்கு சுமார் 500 பேர் வீதம் பாதிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 23,452 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 723 ஆகவும் உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,814 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்