கொரோனாவால் கைவிடப்படும் வளர்ப்பு பிராணிகள்! வளர்ப்பு பிராணிகளுக்காக நிதி திரட்டும் வரலக்ஷ்மி!

Default Image

கொரோனாவால் கைவிடப்படும் வளர்ப்பு பிராணிகளுக்காக நிதி திரட்டும் நடிகை வரலக்ஷ்மி.

கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒருமாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும்  ஏழை, எளிய மக்கள் தாங்கள் உண்பதற்க்கே உணவில்லாமல் தவித்து வருகிற நிலையில்,  தங்களது வளர்ப்பு பிராணிகளை அப்படியே விட்டு விடுகின்றனர்.

இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலையில் திரியும் கால்நடைகளும் உணவின்றி தவித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையிலும், அவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், நடிகை வரலட்சுமி சரத்குமார், தான் வசிக்கும் பகுதியில் உள்ள தெரு நாய்கள், கால்நடைகளுக்கு உணவளித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், தனது ‘சேவ் சக்தி’ பவுண்டேசன் சார்பில் கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கவும், உணவு வழங்கவும் நிதி திரட்டி வருகிறார். இதற்காக பவுண்டேஷனின் வங்கி கணக்கு விவரத்தை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்