அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வரை ஓய மாட்டேன்- டிரம்ப்

Default Image

 அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வரை ஓய மாட்டேன் என்று அதிபர் டிரம்ப்  தெரிவித்துள்ளார்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், பலியானோரின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.இந்த வைரஸ் நோயினால் அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த நோயினால், அமெரிக்காவில், 2,342 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 886,442 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்குஇடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,

அமெரிக்க பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்கும் வரை நான் ஓய மாட்டேன்.முன் இருந்ததை விட அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தப்போகிறோம்.பங்குச்சந்தையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்