இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 21,393ஆக அதிகரிப்பு

Default Image

இந்தியாவில்  தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது .

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தியாவில்  தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது . நாடு முழுவதும்  21,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 681 ஆக  அதிகரித்துள்ளது.4258 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் .இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பால் 789 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 269 பேர் குணமடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்