ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்!

Default Image

ஏழை மக்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தவசி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏழை, எளிய மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவிக் கரம் நீட்டி வருகிற நிலையில், ஆர்.கே.நகர் பகுதி மக்களுக்கு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தவசி, அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்