நாளை புதுச்சேரியில் முதல்வர் , எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை

Default Image

நாளை புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு  உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது.

இந்நிலையில் தான் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்  புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது,நாளை புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு  உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார்.  நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்  என்று அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்