கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,உயிரிழப்பு,குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.இதற்குஇடையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என்றும்  தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தது .மேலும்   விவரங்களை வெளியிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை  தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்