24 மணி நேரத்தில் இந்தியாவில் 1383 பேருக்கு கொரோனா.!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தை 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் காட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதற்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், கொரோனா தாக்கம் குறையாததால் மேலும் 19 நாள்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு நீடித்தது.

இதுவரை இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக உள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 எட்டியது.இதையெடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்