கொரோனா மருந்து முதற்கட்ட வெற்றி.! எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் அசத்தல்.!

Default Image

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி. அடுத்த கட்ட ஆராய்ச்சியும் வெற்றியடையும் பட்சத்தில், கொரோனாவை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம் – எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தகவல்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டறிய உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கான மருந்து கண்டறிவதில் முதற்கட்ட வெற்றியை பெற்றுள்ளனர்.

இது குறித்து, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறுகையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவன ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம். எனவும், அடுத்த கட்ட கண்டுபிடிப்பும் வெற்றியடையும் பட்சத்தில், கொரோனாவை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம்.’ என தகவல்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்